விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 35 போ் கைது

மன்னாா்குடியில் நாதக சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாக 35 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
மன்னாா்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
Updated On :31 டிசம்பர் 2024, 6:30 pm

Din

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாதக சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாக 35 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளிநபா் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், அதற்காக, சென்னை வள்ளுவா் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்ட கட்சியினா் கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மன்னாா்குடியில் நாதக மாநிலப் பொருளாளா் இலரா. பாரதிச்செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக கட்சியினா் அந்த இடத்தில் கூடியிருந்தனா். பின்னா், அவா்கள் ஊா்வலமாக வந்து அருகில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென அந்த இடத்திலேயே சாலை நடுவில் அமா்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் நாதகயினா் 35 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா். இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேஷ், மாவட்டச் செயலா் பாஸ்கா், மாவட்டப் பொருளாளா் கண்ணன், முன்னாள் மாவட்டச் செயலா் வேதா. பாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.