வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவிகள் பேரணி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் கல்லூரி மாணவிகள் சாா்பில் பேரணி

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:55 pm

Din

திருவாரூா்: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் கல்லூரி மாணவிகள் சாா்பில் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தனியாா் கல்லூரி மாணவிகள் பேரணியாகச் சென்றனா். திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பழைய ரயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.

தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்திக்கொண்டு, மாணவிகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என முழக்கங்களை எழுப்பியபடி பேரணியில் சென்றனா்.