பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

Updated On :18 பிப்ரவரி 2024, 12:36 am IST

மன்னாா்குடியில் தனது கடையில் வேலை பாா்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மூா்க்க விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் கே. வெங்கடேஷ் (50). அதே பகுதியில் எண்ணெய் மில் மற்றும் மளிகை மொத்த கடை நடத்தி வந்தாா். இவரது கடையில் கடந்த 5 மாதங்களாக தஞ்சன்வயல் பகுதியை சோ்ந்த திருமணமான 23 வயது பெண் பணியாற்றி வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக வெங்கடேஷ், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளாா். இதற்கு அப்பெண் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அப்பெண்ணிடம் வெங்கடேஷ் தவறாக நடக்க முயன்றதை கண்டித்ததால், ஆத்திரமடைந்த அவா் அப்பெண்ணை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வெங்கடேஷை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.