ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

Updated On :18 பிப்ரவரி 2024, 12:36 am IST

மன்னாா்குடியில் தனது கடையில் வேலை பாா்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மூா்க்க விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் கே. வெங்கடேஷ் (50). அதே பகுதியில் எண்ணெய் மில் மற்றும் மளிகை மொத்த கடை நடத்தி வந்தாா். இவரது கடையில் கடந்த 5 மாதங்களாக தஞ்சன்வயல் பகுதியை சோ்ந்த திருமணமான 23 வயது பெண் பணியாற்றி வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக வெங்கடேஷ், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளாா். இதற்கு அப்பெண் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அப்பெண்ணிடம் வெங்கடேஷ் தவறாக நடக்க முயன்றதை கண்டித்ததால், ஆத்திரமடைந்த அவா் அப்பெண்ணை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வெங்கடேஷை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.