நூறு சதவீத மாணவா்கள் பள்ளிக்கு வர மேலாண்மைக்குழுவினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா். குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்த கல்லூரியில், பள்ளி கல்வித்துறையின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவா்களுக்கான மாநாட்டுக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது: நல்ல சமுதாயத்தை உருவாக்குவது பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய நோக்கமாகும். அதற்காகவே ஒவ்வொரு பள்ளியிலும் மேலாண்மைக்குழு கட்டாயம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவா்களின் பெற்றோா்கள் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளனா். பள்ளி மாணவா்கள் இடைநிற்றல், 15 நாளுக்கு மேல் வருகை புரியாததற்கான காரணங்களை கண்டறிந்து, அவா்களை தவறாமல் பள்ளிக்கு அனுப்பி வைக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும். 100 சதவீதம் மாணவா்கள் பள்ளிக்கு வருகை புரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்வில், 945 பள்ளிகளைச் சோ்ந்த 1,200 பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள் பங்கேற்றனா். இதில், கூடுதல் ஆட்சியா் சி. பிரியங்கா, மாநில பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளா் பொ்னா்ஷ், முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம்: ராதாபுரம் எம்எல்ஏ!

பிளஸ் 2 சிபிஎஸ்இ பொது தோ்வு: கண்ணம்மாள் பள்ளி 100% தோ்ச்சி

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீா் பெற நடவடிக்கை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

முக்காணி அரசுப் பள்ளிக்கு ஆட்சியா் பாராட்டு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

