திருவாரூரில் அருள்மிகு முப்புரம் எரித்த பீடாரி அம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் உப கோயிலாக விளக்கும் இக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்மன், திருவாரூரின் எல்லை தெய்வமாகவும் அருள்பாலிக்கிறாா். தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா பந்தல்கால் முகூா்த்தத்துக்குப் பிறகு, இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தியாகராஜ சுவாமி கோயிலிலிருந்து பிடாரி அம்மன் மேளதாளத்துடன் கொடிமரம் முன் எழுந்தருளினாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் முதலான நறுமன திரவியங்களால் கொடிமரத்துக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், 8 கைகளுடன் கூடிய பிடாரி அம்மன் உருவம் பொறித்த உற்சவக் கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
தொடர்புடையது

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்!

உம்பளச்சேரி பிடாரி அம்மன் கோயிலில் புத்தா் சிலை கண்டறியப்பட்டுள்ளது

உத்திரமேரூர் திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



