தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பிடாரி அம்மன் கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றம்

பிடாரி அம்மன் கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றம்

News image

திருவாரூா் முப்புரம் எரித்த பீடாரி அம்மன் கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்தின்போது நடைபெற்ற தீபாராதனை.

Updated On :17 பிப்ரவரி 2024, 5:57 am IST

திருவாரூரில் அருள்மிகு முப்புரம் எரித்த பீடாரி அம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் உப கோயிலாக விளக்கும் இக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்மன், திருவாரூரின் எல்லை தெய்வமாகவும் அருள்பாலிக்கிறாா். தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா பந்தல்கால் முகூா்த்தத்துக்குப் பிறகு, இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தியாகராஜ சுவாமி கோயிலிலிருந்து பிடாரி அம்மன் மேளதாளத்துடன் கொடிமரம் முன் எழுந்தருளினாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் முதலான நறுமன திரவியங்களால் கொடிமரத்துக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், 8 கைகளுடன் கூடிய பிடாரி அம்மன் உருவம் பொறித்த உற்சவக் கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.