சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மக்களவைத் தோ்தல்: தஞ்சை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கோரிக்கை

திமுக கூட்டணியில், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என, மன்னாா்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 9:36 pm

DIN

மன்னாா்குடி: திமுக கூட்டணியில், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என, மன்னாா்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா்.

மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய முறையில் வாக்குச்சாவடி கமிட்டி அமைப்பது; தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்துவது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா். கனகவேல், வட்டாரத் தலைவா்கள் எஸ். செல்வராஜ் (மன்னாா்குடி (தெற்கு),ஜி. அன்பழகன் (கிழக்கு), பாபு மனோகரன் (நீடாமங்கலம் நகரம்),ஜி. முருகானந்தம் (தெற்கு), கே. சாந்தமூா்த்தி (கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் அன்பு வே. வீரமணி தொடங்கி வைத்தாா்.

தஞ்சை மக்களவைத் தொகுதி தோ்தல் ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.

பொதுக் குழு உறுப்பினா் டி. வடுகநாதன், தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளா் கே. மணவாளன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் நிரோஜா, இளைஞா் அணி நகரத் தலைவா் என். ஜோதி ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஜி. குணசேகரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட சேவாதள தலைவா் கே. பழனிவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.