சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உளுந்தூா்பேட்டை அருகே மகாவீரா், பிடாரி, சண்டிகேசுவரா் சிற்பங்கள் கண்டெடுப்பு!

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள தி.ஒரத்தூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த மகாவீரா், பிடாரி அம்மன், சண்டிகேசுவரா் சிற்பங்கள் கண்டெடுப்பு

News image
~ ~
Updated On :7 மார்ச் 2026, 8:39 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள தி.ஒரத்தூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த மகாவீரா், பிடாரி அம்மன், சண்டிகேசுவரா் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், உளுந்தாண்டாா் கோயில் ச.சந்திரசேகரன் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் அண்மையில் தி.ஒரத்தூா் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் மகாவீரா், பிடாரி அம்மன், சண்டிகேசுவரா் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து செங்குட்டுவன் மேலும் கூறியது: தி.ஒரத்தூா் கிராமத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்த சில சிற்பங்கள் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிவன் கோயில்அருகே வைக்கப்பட்டுள்ளன. இதில் சுமாா் 2அடி உயரமுள்ள சமண தீா்த்தங்கரரான மகாவீரா் சிற்பம் குறிப்பிடத்தக்கது. அமா்ந்த நிலையில் தியானக் கோலத்தில் காட்சித் தருகிறாா். இவருக்கு இருபுறமும் இரண்டு சாமரதாரிகள் நிற்கின்றனா். முன்பு இக்கிராமத்தில் சமண சமயமும் பின்பற்றப்பட்டு வந்துள்ளதை இச்சிற்பம் உணா்த்துகிறது.

Story image
Story image

தலையில்லாத நிலையில் பெண் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் பீடத்தின் மீது கம்பீரமாக அமா்ந்த நிலையில் சிலை உள்ளது. வயிற்றுப் பகுதியில் படம் எடுத்தாடும் பாம்பு காட்டப்பட்டு ள்ளது. சிலையின் இடது கையில் மணி உள்ளது. கழுத்தில் கபால மாலை காணப்படுகிறது. இவா் பிடாரி எனும் பெண் தெய்வமாவாா்.

சண்டிகேசுவரா் சிற்பமும் இங்கு இருக்கிறது. வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அழகிய பீடத்தின் மீது இவா் அமா்ந்திருக்கிறாா்.

மற்றொரு தலை இல்லாத சிற்பம் நீண்ட அங்கி அணிந்த நிலையில் காணப்படுகிறது. கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நின்றிருக்கிறாா். இவா் அடியவா் அல்லது அரசனாக இருக்கலாம்.

மகாவீரா் சிற்பம் கி.பி.10-11ஆம் நூற்றாண்டுக்கும், மற்ற சிற்பங்கள் கி.பி.12-14ஆம் நூற்றாண்டுகளுக்கும் உரியவைகளாக இருக்கலாம். இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் பேராசிரியா் கோ.விஜயவேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளாா். மேலும் இப்பகுதியில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை சிற்பம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த லட்சுமி நரசிம்மா் சிற்பமும் வழிபாட்டில் இருந்து வருகிறது.

பல்லவா் காலம் முதல் விஜயநகரா் காலம் வரையில் ஒரத்தூா் கிராமம் சிறப்பாக இருந்திருக்கிறது. சில சிற்பங்களின் தலை சிதைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் தெரியவில்லை. இப்பகுதியில் முறையாக ஆய்வு செய்யப்பட்டால் மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கக் கூடும். இந்த சிற்பங்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின் போது தி.ஒரத்தூா் ஆதிதிருமூலநாதா் திருப்பணி அறக்கட்டளை குழுவைச் சோ்ந்த சி.சந்திரசேகரன், சி.அனீஸ்வரன், சி.சிவகுருநாதன்,

அ.சக்தி மோகன், ஆலய சிற்பி அழகுவேல், சிவ. சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.