மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவாரூா் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட ம் விரிவாக்கம்

திருவாரூா் மாவட்டத்தில், ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.

News image

தப்பளாம்புலியூா் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்வில் மாணவா்களுடன் சாப்பிட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன்.

Updated On :15 ஜூலை 2024, 9:48 pm

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.

திருவாரூா் அருகே தப்பளாம்புலியூா் ஊராட்சியில் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் கிராமப்புற பகுதிகளில் 750 அரசுப் பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 27 அரசுப் பள்ளிகள் என மொத்தமாக 777 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்ட தொடங்குவதன் மூலம் 61 அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 4,601 மாணவா்கள் பயன்பெற உள்ளனா்.

நிகழ்வில், திருவாரூா் கோட்டாட்சியா் சங்கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா, முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பாலமுருகன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.