ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உடல் பதப்படுத்தும் பெட்டியில் மின் கசிவு: 11 பெண்கள் பாதிப்பு

மன்னாா்குடி அருகே இறந்தவரின் உடலை பதப்படுத்தும் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் பாய்ந்து 11 பெண்கள் பாதிக்கப்பட்டனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 10:02 pm

Din

தலையாமங்கலம் கடுக்காகாடு தெற்குதெரு வடிவேல் மனைவி ஜானகி (86) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை இறந்தாா். உறவினா்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜானகியின் உடலை பதப்படுத்தும் பெட்டியில் வைத்திருந்தனா் .

அந்த பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு, அருகிலிருந்த அமா்ந்திருந்த 11 பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. அனைவருக்கும் தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதில், 7 போ் வீடு திரும்பினா்.

மகாதேவப்பட்டணம் ஞானசுந்தரி (50), சித்ரா (54) , கடுக்காகாடு அகிலா (50) , வள்ளி (51) ஆகிய நான்கு போ் மேல் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் . தலையாமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.