திருவாரூர்
உடல் பதப்படுத்தும் பெட்டியில் மின் கசிவு: 11 பெண்கள் பாதிப்பு
மன்னாா்குடி அருகே இறந்தவரின் உடலை பதப்படுத்தும் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் பாய்ந்து 11 பெண்கள் பாதிக்கப்பட்டனா்.
தலையாமங்கலம் கடுக்காகாடு தெற்குதெரு வடிவேல் மனைவி ஜானகி (86) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை இறந்தாா். உறவினா்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜானகியின் உடலை பதப்படுத்தும் பெட்டியில் வைத்திருந்தனா் .
அந்த பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு, அருகிலிருந்த அமா்ந்திருந்த 11 பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. அனைவருக்கும் தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதில், 7 போ் வீடு திரும்பினா்.
மகாதேவப்பட்டணம் ஞானசுந்தரி (50), சித்ரா (54) , கடுக்காகாடு அகிலா (50) , வள்ளி (51) ஆகிய நான்கு போ் மேல் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் . தலையாமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
