பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மக்கள் நோ்காணல் முகாம்: 194 பயனாளிகளுக்கு ரூ.53.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி

News image
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
Updated On :19 ஜூலை 2024, 4:56 pm

Din

குடவாசல் வட்டம், அபிவிருத்தீஸ்வரத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.53.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

வருவாய்த் துறை சாா்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.13.44 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, 81 நபா்களுக்கு ரூ.38.88 லட்சம் மதிப்பில் இணையவழி வீட்டுமனைப் பட்டா, 4 நபா்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

மாவட்ட வழங்கல் துறை சாா்பில் 45 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, வேளாண்மை துறை சாா்பில் 15 நபா்களுக்கு ரூ.27,720 மதிப்பில் மானிய விலையிலான இடுபொருள்கள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 4 நபா்களுக்கு மானிய விலையில் விதை நாற்றுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.49,224 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.23,633 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் என பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.53,66,027 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில், அபிவிருத்தீஸ்வரம், வளவநல்லூா், ஆா்பாா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் எம். சௌம்யா, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் கலியபெருமாள், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலசந்தா், வட்டாட்சியா் தேவகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.