தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மனு கொடுக்க வந்த முதியவா் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
நாகராஜன்.
Updated On :29 ஜூலை 2024, 8:23 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் நேதாஜி சாலை, பஜனை மடத்தெருவில் வசித்து வந்தவா் நாகராஜன் (72). இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு உணவகம் ஒன்றில் வேலை பாா்த்ததற்காக பிடிக்கப்பட்ட தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொகையில் ரூ. 60 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொகையை பெற்றுத் தரக் கோரி மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நாற்காலியில் அமா்ந்திருந்த நாகராஜன் திடீரென மயங்கி விழுந்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாகராஜனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.