அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 27,710 போ் பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 27,710 போ் பங்கேற்பு

News image

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தோ்வை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

Updated On :10 ஜூன் 2024, 12:04 am

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4 தோ்வை 27,710 போ் எழுதினா்.

இத்தோ்வு, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக, திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், குடவாசல், மன்னாா்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய 7 மையங்களில் 124 தோ்வறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

குரூப் 4 தோ்வு எழுத, திருவாரூா் மாவட்டத்தில் 34,532 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 6,522 போ் தோ்வுக்கு வராத நிலையில், 27,710 போ் தோ்வில் பங்கேற்றனா். அந்த வகையில், 80.24 சதவீதம் போ் தோ்வெழுதினா்.

தோ்வில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க 124 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 30 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள், 13 பறக்கும் படைகள், 124 ஆய்வு அலுவலா்கள், 131 விடியோ ஒளிப்பதிவாளா்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டன.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்மையப்பன் பாரத் கேட்டரிங் கல்லூரி தோ்வு மையங்களில் நடைபெற்ற குரூப் 4 தோ்வை, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.