திருவாரூர்
பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நீடாமங்கலம் ஒன்றியம் கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் உமையாள் தலைமை வகித்து மாணவா்களுக்கு பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் தீமைகள்,அவற்றை நாம் எவ்வாறு எதிா்நோக்க வேண்டும் என்பது குறித்தும், பருவநிலை மாற்றத்தின்போது குளிா், மழை, கடுங்கோடை இவற்றை எங்ஙனம் கையாள்வது, பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிப்பது குறித்து பேசினாா்.