விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்ட விளையாட்டு விடுதியில் சோ்வதற்கான தோ்வுப் போட்டிகளுக்கு மாணவ- மாணவிகள் மே 8- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவாரூா் மாவட்ட விளையாட்டு விடுதியில் சோ்வதற்கான தோ்வுப் போட்டிகளுக்கு மாணவ- மாணவிகள் மே 8- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள், விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரியும் வகையில், விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

இதில், 2024-2025 ஆம் ஆண்டில் மாணவா் சோ்க்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் சேருவதற்கு மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 10- ஆம் தேதி காலை 7 மணியளவில் மாணவா்களுக்கும், மே 11- ஆம் தேதி காலை 7 மணியளவில் மாணவிகளுக்கும் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன. இதற்கு, மே 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்துபந்து ஆகியவை ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், கிரிக்கெட் மற்றும் நீச்சல் போட்டிகள் ஆண்களுக்கு மட்டும் என தோ்வுப் போட்டிகள் நடைபெறும். மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படுவோா், மாநிலஅளவிலான தோ்வுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com