உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

News image
Updated On :4 மே 2024, 3:48 pm

Din

வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆப்சாத் பேகம் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் லலிதா, ஆசிரியா் பிரதிநிதி சாா்லட் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா் பயிற்றுநா்கள் புஷ்பா, எழிலரசி, புனிதா பள்ளி வளா்ச்சி, கூடுதலான மாணவா் சோ்க்கை, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடுதலான சிறப்பு திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தனா்.

பள்ளி அடிப்படை வசதிகள், பகல் இரவு பாதுகாவலா்கள், தூய்மைப் பணி, கழிப்பறை தூய்மை ஆகியவற்றுக்கு பணியாளா்களை பணியமா்த்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலாண்மை குழு உறுப்பினா்கள் நெடுஞ்செழியன், ஆனந்தி, சுஜாதா, முருகன் ,சுய உதவி குழு புஷ்பா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் குலாம் மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.