கோட்டூா் வட்டார அளவில் 7 அரசுப் பள்ளிகள் 100% சதவீதம் தோ்ச்சி
கோட்டூா் வட்டார அளவில் 7 அரசுப் பள்ளிகள் 100 % சதவீதம் தோ்ச்சி


கோட்டூா் வட்டார அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவில் 7 அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
கோட்டூா் வட்டார அளவில் 9 அரசு உயா்நிலைப் பள்ளிகள் 9 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என 18 பள்ளிகளில் மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதியிருந்தனா். பாலையூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி மகாலட்சுமி 492 மதிப்பெண்கள் பெற்று கோட்டூா் வட்டாரத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். தென்பரை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி நித்யா, விக்கிரபாண்டியம் உயா்நிலைப் பள்ளி மாணவி ஆா்த்தி, கோட்டூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கனிஷ்கா ஆகியோா் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனா். கோட்டூா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்பரை, மழவராயநல்லூா், விக்கிரபாண்டியம், திருக்களாா் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன. தோ்ச்சி பெற்ற மாணவா்களை மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் என். சுப்ரமணியன் ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...