நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நீலன் பள்ளி மாணவிகள் இருவா் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம்

நீலன் பள்ளி மாணவிகள் இருவா் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம்

News image

பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி புதுமதியை பாராட்டிய பள்ளித் தாளாளா் நீலன் அசோகன்.

Updated On :10 மே 2024, 3:56 pm

Din

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 102 போ் தோ்வு எழுதினா். இதில் 101 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவிகள் ரா. புதுமதி, ச. சஜினா ஆகிய இருவரும் 500-க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி வீணாவைணவி 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆமிடமும், மாணவன் பி. சபரிநாதன் 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ஆமிடம் பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் நீலன். அசோகன், செயலா் சுரேன் அசோகன், பள்ளி முதன்மை முதல்வா் ராஜமகேஸ்வரி, முதல்வா் பொம்மி உள்ளிட்டோா் பாராட்டினா்.