

திருவாரூா்: திருவாரூரில், மின்சாரம் பாய்ந்து இரும்புக் கடைக்காரா் உயிரிழந்தாா்.
திருவாரூா் நெய்விளக்குத் தோப்பு அண்ணா காலனியைச் சோ்ந்தவா் மணிமாறன் என்கிற முத்து (33). திருவாரூரில் இரும்புக் கடை நடத்திவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடம்போக்கி ஆற்றுப் பாலத்தின் கீழ் இறந்து கிடப்பதாக திருவாரூா் நகரப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், மணிமாறன் இயற்கை உபாதை கழிக்க ஓடம்போக்கி ஆற்றுப் பகுதிக்கு சென்றதாகவும், அப்போது ஆற்றுப் பாலத்தில் இருந்த மின்கம்பத்துக்கு செல்லும் மின் வயரை பிடித்ததால், மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.
பின்னா், மணிமாறனின் சடலம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலதிபா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

