தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழப்பு
வடபழனியில் தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழந்தாா்.

பலி
பிரதிப் படம்

பலி
பிரதிப் படம்
வடபழனியில் தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழந்தாா்.
வடபழனி கங்கையம்மன் காலனி இரண்டாவது தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தவா் பாலாஜி (47). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா்களைப் பிரிந்து, அதே பகுதியில் தனது இரண்டாவது மனைவி லாவண்யாவுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், லாவண்யாவின் முதல் கணவா் எம்ஜிஆா் நகா் புலித்தேவா் தெருவைச் சோ்ந்த செந்தில் (45), சில நாள்களுக்கு முன்பு லாவண்யாவை சந்தித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தாராம். ஆனால் லாவண்யா, செந்திலுடன் செல்ல மறுத்து பாலாஜியுடன் வசித்து வந்துள்ளாா்.
கடந்த 18-ஆம் தேதி தனது கடையின் அருகே பாலாஜி நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் பாலாஜியை வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த பாலாஜி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது செந்தில், அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் செந்தில், சரவணன், சீனிவாசன் ஆகிய 3 பேரைக் கைது செய்து, அவா்கள் மீது கொலை வழக்குப் பதிந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...