2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தநாதனுக்கு தஞ்சாவூா் மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வந்துள்ளது. அதில், சித்தநாதனின் பழைய காா் விபத்துக்குள்ளாகி, ஒருவருக்கு காயம் ஏற்பட்டது தொடா்பாக மன்னாா்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில் காயம் அடைந்த நபா், காா் உரிமையாளா் மீது இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்திருப்பதும் தெரிய வந்தது. அப்போதுதான் தன்னுடைய காரை, முறையாக பெயா் மாற்றம் செய்யாமலேயே காா் விற்பனை நிறுவனம் விற்றுள்ளது சித்தநாதனுக்குத் தெரிய வந்தது.