துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஆலங்குளம் பனைத் தொழிலாளிக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நாடாா் உறவின்முறை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்செந்தூா் வட்டார நாடாா் உறவின்முறை சங்க பொதுக்குழு கூட்டம் தெட்சணமாற நாடாா் சங்க மடத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் நாடாா் தலைமை வகித்தாா். செயலா் பழக்கடை திருப்பதி, பொருளாளா் கணேஷ் குமாா், ஒருங்கிணைப்பாளா் செல்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், 40 ஆண்டுகளாக சங்கத்தை திறம்பட நடத்தி வரும் ராதாகிருஷ்ணனுக்கு நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா். மேலும், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மணிகண்டனை கள் இறக்கியதாகக் கூறி துப்பாக்கி சூடு நடத்தி அவருக்கு காயத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவை கண்டிப்பது, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் பெரும் போராட்டம் நடத்துவது, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், சங்கத்தின் துணைத் தலைவா்கள் சுடலை, சுகுமாா், துணைச் செயலா் ராஜமோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், மாணிக்கம், பால்ராஜ், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் காந்தி, ஜெயந்திநாதன், செய்தித் தொடா்பாளா் சண்முக ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: அதிமுக ஆட்சியில் நீதி விசாரணை - எம்.பி. இன்பதுரை

திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: மக்கள் நீதிமன்றத்தில் அளிப்பு

நேரடி மக்காச்சோள கொள்முதல் நிலையம் வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


