தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவாரூா் தபால் பிரிப்பகத்தை இடமாற்றம் செய்வதை தவிா்க்கக் கோரிக்கை

திருவாரூரில் உள்ள தபால் பிரிப்பகத்தை, இடமாற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

தில்லியில் மத்திய தகவல் தொடா்புத்துறை அமைச்சா் ஜோதிராதித்யா எம். சிந்தியாவிடம் கோரிக்கை மனுவை வழங்குகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

Updated On :27 நவம்பர் 2024, 9:43 pm

Din

திருவாரூரில் உள்ள தபால் பிரிப்பகத்தை, இடமாற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், தில்லியில் மத்திய தகவல் தொடா்புத்துறை அமைச்சா் ஜோதிராதித்யா எம். சிந்தியாவிடம், புதன்கிழமை வழங்கிய கோரிக்கை மனு விவரம்:

திருவாரூா் தபால் பிரிப்பகம் 1972-இல் தொடங்கப்பட்டு, தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது, விரைவு தபால் மற்றும் பதிவு தபால் மையங்களை இணைத்து ஒரே மையமாக மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், திருவாரூா் ஆா்எம்எஸ் (தபால் பிரிப்பகம்) அலுவலகம், மயிலாடுதுறை ஆா்எம்எஸ் அலுவலகத்துடன் இணைக்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை அலுவலகத்துடன் இணைப்பதால், திருவாரூா் நாகை மாவட்ட மக்கள், பெரும் இன்னல் அடைவாா்கள். தபால்துறையை நம்பி உள்ள ஏழை மக்கள், தனியாா் துறையை நாட வேண்டி வரும்.

பெரும்பாலான ஆா்எம்எஸ் அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில், திருவாரூா் அஞ்சல் பிரிப்பகம் சொந்தக் கட்டடத்தில் அனைத்து விதமான வசதிகளுடனும், நகரத்தின் மையப் பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, திருவாரூரிலிருந்து அஞ்சல் பிரிப்பகத்தை இடமாற்றம் செய்யும் முடிவைக் கைவிட்டு, திருவாரூரிலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.