தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நன்னிலம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:01 pm

Din

நன்னிலம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நன்னிலம் பகுதியில் பெய்த மழையால் சில இடங்களில் நீா் தேங்கியுள்ளது. எனினும், மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் மக்கள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் நன்னிலம் வட்ட வடகிழக்குப் பருவமழைப் பொறுப்பு அலுவலா் டிஎன்சிஎஸ்சி முதுநிலை மண்டல மேலாளா் புகாரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வடகிழக்குப் பருவமழைக்காக தயாரிப்பு நிலையில் உள்ள பொருள்கள் மற்றும் கருவிகளைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து திருமலைராஜன் ஆற்றின் கரையோரம் உள்ள அதம்பாா், பல்லவநத்தம், விஷ்ணுபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பாா்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாா். அவருடன், கலால் துணை ஆட்சியா் சின்னதுரை, நன்னிலம் வட்டாட்சியா் ரஷியா பேகம், குடவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.