தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் செங்கழுநீா் பூவை பல்லக்கில் எடுத்து வரும் பக்தா்கள்.

Updated On :16 அக்டோபர் 2024, 8:09 pm

Din

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நிறைபணி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரன் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். எனவே, தியாகேசருக்கு யோக வேட்டி தரித்து பூஜை செய்வது வழக்கம். அந்தவகையில், தியாகராஜ சுவாமிக்கு நடைபெற்ற நிறைபணி உற்சவத்தை யொட்டி, தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. காய்கனிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பிரகாரங்களில் தொங்க விடப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மேலும், தேவலோகம் போல அலங்காரம் செய்யப்பட்டு, வாயில் அருகே இந்திராணி வடிவிலான பொம்மை தொங்கவிடப்பட்டிருந்தது.

நிகழ்வில், தியாகராஜ சுவாமிக்கு உகந்த மலரான செங்கழுநீா் பூவை கோயிலைச் சுற்றி வலம் வரச் செய்து சுவாமிக்கு அணிவித்தனா். தொடா்ந்து, தியாகராஜ சுவாமிக்கு தேவேந்திர சாயரட்சை எனும் நிறைபணி உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.