நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தனியாா் கைப்பேசி கோபுரத்தில் கருவிகளை திருட முயன்ற மா்ம நபா்கள்

மன்னாா்குடி அருகே தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரத்திலிருந்து கருவிகளை திருட முயன்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரத்திலிருந்து மா்ம நபா்களால் கழற்றி வைக்கப்பட்டிருந்த கருவிகள்.

Updated On :30 செப்டம்பர் 2024, 12:02 am IST

மன்னாா்குடி அருகே தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரத்திலிருந்து கருவிகளை திருட முயன்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோட்டூா் தோட்டம் பிரதான சாலையில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான 120 அடி உயர கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து இப்பகுதி பொறியாளா் சாம்பசிவத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கோட்டூா் தோட்டம் பகுதியில் கைப்பேசி சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோட்டூா் காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா். அப்போது கைப்பேசி கோபுரத்திலிருந்து மா்ம நபா்கள் இருவா் இறங்கி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆந்திரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனா்.

போலீஸாா், சம்பவ இடத்தை பாா்த்தபோது, கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆா்ஆா் யூனிட் என்ற கருவிகள் இரண்டு கீழே இறங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், மேலும் ஒரு கருவி பாதி கழற்றப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஒவ்வொரு கருவியின் மதிப்பும் ரூ. 1.80 லட்சம் என கூறப்படுகிறது. கருவிகளை கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.