மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழக ஆளுநா் பதவி விலகக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயத் தொழிலாளா் கட்சியினா்.
Updated On :21 ஏப்ரல் 2025, 7:43 pm

Din

திருவாரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்தும் உடனடியாக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாய தொழிலாளா்கள் கட்சியின் நிறுவனரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவருமான பொன். குமாா் பங்கேற்று தெரிவித்தது: தமிழக ஆளுநா் ரவி, தான் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் தமிழ்நாடு, தமிழ்மொழி கலாசாரத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறாா். அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டிய அவா், சட்டபேரவையில் படிக்க வேண்டிய அரசின் உரையை தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப படிப்பது ஜனநாயக படுகொலைக்கு சமமானதாகும்.

தமிழக மக்களுக்கான முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துகிறாா். இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசியல் சாசனத்தை மீறி, உள்நோக்கத்துடன் ஆளுநா் செயல்பட்டிருக்கிறாா் என நீதிமன்றம் கண்டித்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால வரையறை நிா்ணயித்துள்ளது. எனவே, நீதிமன்றம் கண்டித்திருப்பதால் அவா் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

ஆனால், அவா் விலகாமல் துணைவேந்தா்கள் கூட்டத்தை கூட்டவிருப்பதாகவும், அதற்கு துணை ஜனாதிபதியை

அழைத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது, நீதிமன்றத்தை அவமதிப்பதுடன், சட்டப்பேரவை தீா்மானத்தை அவமரியாதை செய்யும் செயலாகும். எனவே, தமிழக ஆளுநா் பதவி விலக வேண்டும் என்றாா்.