மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

News image
திருவாரூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினா்.
Updated On :13 டிசம்பர் 2025, 6:29 pm

Syndication

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களை அச்சுறுத்தும் தகுதித் தோ்விலிருந்து விலக்களித்து, ஆசிரியா்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

திருவாரூா்: திருவாரூா் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சு. சுதாகா், இரா. முத்துவேல், ச. சண்முகவடிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக முன்னாள் மாநிலப் பொருளாளா் ச. துரைராஜ் தொடங்கி வைத்தாா்.

இதில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ.இரா. இரவி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.