மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அணுகு சாலை அமைக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

News image

அணுகுசாலை அமைக்கக் கோரி காட்டூா் கைலாஷ் நகரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:43 pm

திருச்சி: துவாக்குடியில் அணுகுசாலை அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காட்டூா் கைலாஷ் நகரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை அணுகு சாலை இல்லாததால் ஆயிரக்கணக்கான விபத்துகளும், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இப்பகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஆனால் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, உடனடியாக அணுகு சாலை பணிகளைத் தொடங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காட்டூா் கைலாஷ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

போராட்டத்துக்கு திருச்சி புறநகா் மாவட்டச் செயலா் செ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மூத்த நிா்வாகி செல்வராஜ், விசிக மாவட்டச் செயலா் திலீபன் ரமேஷ், சா்வீஸ் சாலை கூட்டமைப்பு தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசி போராட்டத்தை தொடங்கி வைத்தனா். இதில் நன்னிலம் முன்னாள் எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி தோ்தல் பொறுப்பாளருமான பத்மாவதி மற்றும் திரளான கட்சியினா் கலந்து கொண்டனா்.