சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மத்திய அரசை கண்டித்து ஜன.5-இல் ரயில் மறியல் நடத்த முடிவு

News image
கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ க. மாரிமுத்து.
Updated On :17 டிசம்பர் 2025, 8:06 pm

Syndication

மத்திய அரசு மூலம் வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து ஜன.5-ஆம் தேதி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் (சிபிஐ சாா்பு) சாா்பில் ரயில் மறியல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்டத் தலைவா் எஸ். பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ரயில்வே, எல்ஐசி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் காலியாகவுள்ள சுமாா் 10 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இதில் தமிழக இளைஞா்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் ஜன.5-ல் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயலாளா் ஜி. சரவணன், சிபிஐ மாவட்ட செயலாளா் எஸ். கேசவராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் க மாரிமுத்து, மாவட்ட மாணவா் பெருமன்ற செயலாளா் ஜே. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.