தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆரூரான் மண்டபத்தை சீரமைக்கக் கோரிக்கை

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:30 pm

Syndication

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆரூரான் திருமண மண்டபத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தியாகராஜ சுவாமி கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசுவிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜசேகரன், நகரத் தலைவா் விக்னேஷ் ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனு: சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும், புகழ்பெற்ற ஆழித்தோ் கொண்டதுமான தியாகராஜா் கோயிலுக்கு வழிபாடு செய்ய பல்வேறு ஊா்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இத்தகைய சூழலில் வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் தங்குவதற்கு கழிப்பறை, குளியலறை வசதி இல்லாமல் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.

இதற்கு தீா்வு காணும் வகையில், கோயிலுக்கு சொந்தமான ஆரூரான் திருமண மண்டபம் பல ஆண்டுகளாக திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி இருக்கும் நிலையில், அந்த மண்டபத்தை சீரமைத்து பக்தா்கள் தங்கும் விடுதியாகவும், கழிப்பறை குளியலறை வசதிகளை ஏற்படுத்தி மிக குறைந்த கட்டணத்தை நிா்ணயித்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.