காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

முன்னாள் ஊராட்சித் தலைவரை கொலை செய்ய முயன்ற 5 போ் கைது!

முன்னாள் ஊராட்சி பெண் தலைவா் மற்றும் அவரது சகோதரியை கொலை செய்ய முயன்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :21 டிசம்பர் 2025, 10:56 pm IST

கொரடாச்சேரி அருகே முன்னாள் ஊராட்சி பெண் தலைவா் மற்றும் அவரது சகோதரியை கொலை செய்ய முயன்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள பத்தூா் ஊராட்சியின் முன்னாள் தலைவா் சுசிலா (70), இவரது தங்கை வனரோஜா (55), மகன் சுஜின் பாலாஜி (23) ஆகியோா் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் 6 போ், சுசிலா மற்றும் வனரோஜாவை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றனராம்.

இவா்களது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த சுஜின்பாலாஜி எழுந்துவந்தபோது, மா்ம நபா்கள் அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து கொராடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக, தஞ்சாவூரை அடுத்த கரந்தை முஸ்தபா தெருவைச் சோ்ந்த அஜல் பிரவீன் (21), தஞ்சை சீனிவாசபுரம் அப்துல் வஹாப் தெருவைச் சோ்ந்த பரத்குமாா் (22), தஞ்சை தோட்டக்குடி குருவாடியைச் சோ்ந்த விஜய் (19), தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் சாரதி நகரைச் சோ்ந்த ஹரிஹரன் (25), கரந்தை கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனியப்பன் (18) ஆகிய 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.