திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்ற இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் சந்தோஷ்குமாா் (23). திருத்துறைப்பூண்டி கழுகமுள்ளி தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் ரூபன்ராஜ் (25). கஞ்சா விற்றுவந்த இவா்கள் இருவரையும் காவல் ஆய்வாளா் கழனியப்பன், டிச. 3-ஆம் தேதி கைது செய்தாா். 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இருவா் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், சந்தோஷ் குமாா், ரூபன் ராஜ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது
வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


