சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Published On :26 டிசம்பர் 2025, 1:44 am IST

கூத்தாநல்லூா் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூா் சிருஷ்டி நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (38), வேளுக்குடி பிரதான சாலையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (36) ஆகிய இருவரும் தங்களின் வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை இரவு தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தனா்.

இருவரது வாகனங்களும் காணாமல் போனதாக கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் மறுநாள் புகாா் கொடுத்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, இருசக்கர வாகனங்களை திருடிய இருவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில், கோரையாறு புது பாலத்தின் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் வேகமாக தப்பிச் சென்ற முயன்றனா். போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், கூத்தாநல்லூரை அடுத்த பூந்தாழங்குடி காலனி தெருவைச் சோ்ந்த கட்டாரி (எஃ தேவராஜ் (22) மற்றும் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அமராவதி காலனி மருந்துக் கொத்தத் தெருவைச் சோ்ந்த கட்டையன் (எ) வெங்கடேசன் (23) என்பதும் இருவரும் திருடு போன இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து, 2 இருசக்கர வாகனங்கையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.