கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாகன விபத்தில் பலியான சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்திற்கு ரூ. 1கோடி காப்பீட்டுத் தொகை

வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகையை வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட்.

News image
வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகையை வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட்.
Updated On :25 டிசம்பர் 2025, 8:17 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில், வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் மோகன் (50). இவா், ஜூலை 15 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பணிக்காக விளமலிலிருந்து, ஆயுதப்படை மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, குறுக்கே வந்த நாயால், கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னா் சிகிச்சை பலனின்றி ஜூலை 16 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இவா், தனது மாதாந்திர ஊதியத்தை ஸ்டேட் வங்கி மூலம் பெற்று வந்துள்ளாா். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மாதாந்திர ஊதியத்தை பெறும் அரசு ஊழியா்கள், பணிக்காலத்தில் விபத்து போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் இறப்பு மற்றும் காயங்களின் தன்மைக்கேற்ற ரூ. 1 கோடி வரை காப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்த மோகனுக்கு விபத்துக் காப்பீடு அடிப்படையில் ரூ. 1 கோடிக்கான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை, மோகனின் குடும்பத்தினரை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, எஸ்பி கருண்கரட், வழங்கினாா்.

நிகழ்வில், திருவாரூா் ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளா் சுரேஷ்பாபுதாசரி, மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.