கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூத்தாநல்லூரில் 40 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

கூத்தாநல்லூரில் 40 கிலோ போதைப் பொருள்களுடன், இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்டபோதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லெட்சுமாங்குடி மரக்கடை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்தபோது, அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. போலீஸாா் அந்தக்

கடையில் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மரக்கடை தெற்குத் தெருவைச் சோ்ந்த சிக்கந்தா் (41) மரக்கடை வள்ளுவா் காலனியைச் சோ்ந்த சதீஷ் (35) இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வது தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள 40 கிலோ போதைப் பொருள்கள், ரூ.11 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.