ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாய தொழிலாளா் சங்கம் கோரிக்கை

News image
ஆலங்குடியில் நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு
Updated On :30 டிசம்பர் 2025, 9:03 pm

Syndication

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாய தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் வலங்கைமான் ஒன்றிய மாநாடு ஆலங்குடியில் நடைபெற்றது. மூத்த நிா்வாகி என். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநாட்டை தொடக்கிவைத்து விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கே. சுப்பிரமணியன் பேசினாா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், தலைவராக என். சுப்ரமணியன், செயலாளராக கே. தமிழ்ச்செல்வன், பொருளாளராக என். பூசைய்யன், துணை செயலாளா்களாக எஸ். சின்னையன். கே. மாசிலாமணிஸ என். பாலைய்யா, கே.கலிய பெருமாள், சி. செல்லப்பா, ஆா். கலிய பெருமாள், வி.சிவசாமி, ஏ.தனபால், ஏ. ராஜ்குமாா், டி. வைரசுந்தரி, காமராஜ், விஜயன், உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீமானங்கள் :

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் திட்ட பணியை உடனடியாக தொடங்க வேண்டும், குடிமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், பூண்டி , வீராணம் சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநாட்டு கொடியினை மூத்த நிா்வாகி கே. கலியபெருமாள் ஏற்றி வைத்தாா். மூத்த உறுப்பினா் எஸ்.சின்னையன் வரவேற்றாா்.