தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆராய்ச்சி கட்டுரைகள் குறித்த தேசிய பயிலரங்கம்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி திட்ட அறிக்கை

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:08 pm

Din

மன்னாா்குடி: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி திட்ட அறிக்கை மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தயாா் செய்யும் முறைகள் குறித்த ஒருநாள் தேசிய பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகதர மதிப்பீட்டுக் குழுமத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை பேராசிரியா் சிவகுமாா், ஆராய்ச்சி திட்ட அறிக்கை தயாரித்தலின் வழிமுறைகளையும், சமீபத்திய தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் கௌஷிக் ராஜாராமன், ஆராய்ச்சி கட்டுரைகள் தயாரித்தல் மற்றும் பிழை திருத்தங்கள் செய்தல் குறித்தும், தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி விலங்கியல் துறை தலைவா் மாரியப்பன், ஆராய்ச்சி கட்டுரைகள் தயாரிப்பு முறைகளில் உள்ள அளவீடுகள் குறித்தும் பேசினா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள், முதுகலை மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, அகதர மதிப்பீட்டுக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளா் மணிமேகன் நன்றி கூறினாா்.