மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருதப்பட்டினம் காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே மருதப்பட்டினம் அருள்மிகு காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கும்பாபிஷேகத்தைக் காணத் திரண்ட பக்தா்கள்.
Updated On :3 பிப்ரவரி 2025, 9:43 pm

Din

திருவாரூா்: திருவாரூா் அருகே மருதப்பட்டினம் அருள்மிகு காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில், சாபங்களிலிருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. கும்பாபிஷேக யாகசாலைப் பூஜைகள், விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின.

சனிக்கிழமை மாலை முதல் கால பூஜை தொடங்கியது. பின்னா் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. நான்காம் கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை காலை செய்யப்பட்டு, மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றன.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கடங்களை சிவாச்சாரியா்கள் சுமந்து சென்று, கோயிலை வலம் வந்து மூலஸ்தான கோபுரத்தை அடைந்தனா்.

அங்கு, கோபுர விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீரை வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானவா்கள் பங்கேற்று, காமாட்சி மாரியம்மனை வழிபட்டனா்.