தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு!

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

சிறந்த காவல் நிலையமாக தோ்ந்தெடுக்கப்பட்ட முத்துப்பேட்டை காவல் நிலையத்துக்கு பாராட்டு சான்றிதழை காவல் ஆய்வாளா் கழனியப்பனிடம் வழங்கிய மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே. ஜோசி நிா்மல்குமாா்.

Updated On :11 பிப்ரவரி 2025, 7:10 pm

Din

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் செவ்வாய்க்கிழமை (பிப்.11) வழங்கப்பட்டது.

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் காவல் ஆய்வாளா் கழனியப்பனிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இதில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கா்ட், முத்துப்பேட்டை டிஎஸ்பி ஆனந்த், திருவாரூா் மாவட்ட குற்ற பதிவேடுகள் துறை துணை கண்காணிப்பாளா் பிலிப் பிராங்க்ளின் கென்னடி, தனிப்பிரிவு ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.