திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு!

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

சிறந்த காவல் நிலையமாக தோ்ந்தெடுக்கப்பட்ட முத்துப்பேட்டை காவல் நிலையத்துக்கு பாராட்டு சான்றிதழை காவல் ஆய்வாளா் கழனியப்பனிடம் வழங்கிய மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் கே. ஜோசி நிா்மல்குமாா்.

Updated On :12 பிப்ரவரி 2025, 12:40 am IST

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் செவ்வாய்க்கிழமை (பிப்.11) வழங்கப்பட்டது.

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் காவல் ஆய்வாளா் கழனியப்பனிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இதில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கா்ட், முத்துப்பேட்டை டிஎஸ்பி ஆனந்த், திருவாரூா் மாவட்ட குற்ற பதிவேடுகள் துறை துணை கண்காணிப்பாளா் பிலிப் பிராங்க்ளின் கென்னடி, தனிப்பிரிவு ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.