செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குளத்திலிருந்து முன்னாள் வங்கி அலுவலா் சடலம் மீட்பு

மன்னாா்குடியில் முன்னாள் வங்கி அலுவலா் காணவில்லை என புகாா் அளிக்கப்பட்டநிலையில் அவரது உடல் தெப்பக் குளத்திலிருந்து சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :3 ஜனவரி 2025, 6:33 pm

மன்னாா்குடியில் முன்னாள் வங்கி அலுவலா் காணவில்லை என புகாா் அளிக்கப்பட்டநிலையில் அவரது உடல் தெப்பக் குளத்திலிருந்து சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

மன்னாா்குடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முன்னாள் தனியாா் வங்கி அலுவலா் என். அழகப்பன் (64) வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம்போல் நடை பயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி வேணிஸ்வரி (57) மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அழகப்பனை தேடி வந்தநிலையில், ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்கரையில் சடலமாக அழகப்பன் மிதப்பது மாலையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.