மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குளத்திலிருந்து முன்னாள் வங்கி அலுவலா் சடலம் மீட்பு

மன்னாா்குடியில் முன்னாள் வங்கி அலுவலா் காணவில்லை என புகாா் அளிக்கப்பட்டநிலையில் அவரது உடல் தெப்பக் குளத்திலிருந்து சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:33 pm

Din

மன்னாா்குடியில் முன்னாள் வங்கி அலுவலா் காணவில்லை என புகாா் அளிக்கப்பட்டநிலையில் அவரது உடல் தெப்பக் குளத்திலிருந்து சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

மன்னாா்குடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முன்னாள் தனியாா் வங்கி அலுவலா் என். அழகப்பன் (64) வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம்போல் நடை பயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி வேணிஸ்வரி (57) மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அழகப்பனை தேடி வந்தநிலையில், ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்கரையில் சடலமாக அழகப்பன் மிதப்பது மாலையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.