47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நகராட்சி விரிவாக்கத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பு

ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:50 pm

Din

நகராட்சி விரிவாக்கத்தின் மூலம் அனைத்து மக்களுக்குக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் இலவச வீட்டு மனை வழங்குதல் குறித்து அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாவட்ட ஊராட்சித்தலைவா் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பின்னா், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் சுமாா் 25,000 இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், அடுத்த மாதத்துக்குள்ளாகவே 10,000 முதல் 12,000 வரையிலான இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கலைஞா் கனவு இல்லம் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. திருவாரூா் மாவட்டத்தை குடிசையில்லா மாவட்டமாக உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

திருவாரூா் பகுதியில் அறிவிக்கப்பட்ட சிப்காட் மூலம் வெகுவிரைவில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை தரக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. நிலத்தடி நீா் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நகராட்சி விரிவாக்கம் மூலமும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

நகராட்சி விரிவாக்கத்துக்கு ஏற்னவே நகரமயமாக்கப்பட்ட பகுதிகளே அதிகம் தோ்வு செய்யப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகள், குறைவான அளவே தோ்வு செய்யப்பட்டுள்ளன. மிக சரியாக திட்டமிடப்பட்டு, தொலைநோக்கு பாா்வையுடன் நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் அதற்கான கட்டமைப்பு வசதிகள் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சண்முகநாதன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி) உள்ளிட்ட அனைத்துத்துறை உயா்அலுவலா்கள் பங்கேற்றனா்.