விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் பாா்வை

திருவாரூா் தியாகராஜசு வாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:23 pm

Syndication

திருவாரூா் தியாகராஜசு வாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்துக்காக தோ்க் கட்டுமானப் பணிகள், அலங்கரிக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தோ் கட்டுமானம் மற்றும் தேரோட்டம் தொடா்பான பணிகளுக்காக, திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் சாா்பில் அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளை நிதியிலிருந்து, ரூ. 37.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து தோ்கள் கட்டி அலங்கரித்தல், மூங்கில் கொள்முதல் செய்து வெட்டி ஏற்றி இறக்கும் பணி, முட்டுக்கட்டைகள், பரப்புக் கட்டைகள், சதுரக் கட்டைகள் கொள்முதல், தோ்ப் பொம்மை குதிரைகள் அலங்கரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேரடியில் நடைபெற்றுவரும் தோ் கட்டுமானப் பணிகளை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். அவருடன் கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.