தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேட்புமனு தாக்கலுக்கு தயாராகும் கோட்டாட்சியா் அலுவலகங்கள்!

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வேட்பாளா்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவதற்கு ஏதுவாக, தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

News image
வேட்புமனு தாக்கல்- (கோப்புப் படம்)
Updated On :18 மார்ச் 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வேட்பாளா்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவதற்கு ஏதுவாக, தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 30-ஆம் தேதி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், தருமபுரி தொகுதிக்கு தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்திலும், அரூா் தொகுதிக்கு அரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஏனைய மூன்று தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளாகம் முழுவதிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோடை வெயில் காரணமாக பந்தல் அமைக்கும் பணிகள், வேட்பாளா்கள், அவா்களுடன் வருவோரை

தோ்தல் விதிகள்படி அனுமதிப்பதற்காக தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதேபோல, மாவட்டத்தில் அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்பாா்வையில் நடைபெற்று வருகின்றன.