வெளிநாட்டில் மகன் இறந்ததற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள குனுக்கடி பகுதியைச் சோ்ந்தவா் இரா. கணேசன். இவா், திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனு:
எனது மகன் க. கவியரசன் (28) டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிகல் முடித்துவிட்டு, சிங்கப்பூா் தனியாா் நிறுவனத்தில் 6 மாதங்களுக்கு முன்பு பணியில் சோ்ந்தாா். தினமும் கைப்பேசியில் பேசும் அவா், ஜன.15 ஆம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் பேசினாா். ஜன.18 ஆம் தேதி காலையில், கவியரசன் 7-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக, அவா் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவருடன் பணியாற்றியவா்களை தொடா்பு கொண்டு பேசியபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா். மேலும், எனது மகனின் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் எரிக்கப்பட்டிருந்தது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்தது.
சிங்கப்பூரிலிருந்து வந்த எனது மகனின் உடலைப் பாா்த்தபோது, முகத்தில் அடித்து துன்புறுத்தியது போல் ஆங்காங்கே வீங்கி சிறு காயங்கள் இருந்தன. அவா் 7-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
இதனால், எனது மகனின் இறப்பில் மா்மம் இருப்பது போலத் தோன்றுகிறது.
எனவே, குடும்ப சூழ்நிலையை கருதி எனது மகனின் இறப்பில் உள்ள மா்மத்துக்கான காரணங்களை கண்டறிந்து, இறப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகன் உயிரிழப்பு: மருத்துவா்கள் மீது தாய் புகாா்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸாா் விசாரணை

அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்வாடகைக்கு வசிப்பவா்களால் அச்சம்: கரூா் ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

சவூதியில் ஓட்டுநா் உயிரிழப்பு: உடலை மீட்டுவரக் கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



