திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மேட்டூா் அணை நீா் கல்லணை வந்தடைந்ததும், தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஜூன் 15 -ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து பெரியவெண்ணாறு மூலம் 504 கனஅடி நீா் மூணாறுதலைப்பு அணைக்கு வந்தது. இங்கிருந்து, திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்திற்காக வெண்ணாற்றில் 164 கனஅடியும், கோரையாற்றில் 260 கனஅடி நீரும், பாமணியாற்றில் 80 கனஅடி நீரும் பிரித்து வழங்கப்பட்டது.
இதில், பாமணியாறு மூலம் 38,357 ஏக்கரும், கோரையாற்று மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறும். நீா்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஆறுகளில் கூடுதலாக நீா் திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனால், காலத்தோடு குறுவை சாகுபடி பணிகளை தொடங்க முடியும் என தெரிவித்த விவசாயிகள், மூணாறு தலைப்பிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கடைமடை வரையிலும் செல்வதற்கு தமிழக முதல்வா், நீா்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுடன் குவிந்த மக்கள்

நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் வணிக சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு

நாகை, திருவாரூா், காரைக்காலில் மழை
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


