மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே செம்பியன் கூந்தலூா் பகுதியில் உள்ள ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பத்தில் ஊற்றப்படும் புனித நீா்.
Updated On :10 மார்ச் 2025, 8:45 pm

Din

திருவாரூா்: குடவாசல் அருகே செம்பியன் கூந்தலூா் பகுதியில் உள்ள ரேணுகா மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஐயனாா், சாட்டைக்கார சுவாமி, ரேணுகா மகா காளியம்மன் சந்நிதிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகா் வழிபாடு, கோ பூஜை உள்ளிட்ட வழிபாடுகளுடன் முதல் கால பூஜை தொடங்கி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி, மகா பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயில் வலம் வந்து, பரிவாரத் தெய்வங்களான சித்தி விநாயகா், ஐயனாா், சாட்டைக்கார சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ரேணுகா காளியம்மன் கோயில் விமான கலசத்துக்கு புனித ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.