மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பத்தில் வாா்க்கப்படும் புனிதநீா்.
Updated On :31 மார்ச் 2025, 7:56 pm

Din

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்ணாஹூதி நடைபெற்று, புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கோபுர விமானத்தை அடைந்து, கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் சிட்டி யூனியன் வங்கி நிறுவனா் பாலசுப்ரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாப்பா சுப்ரமணியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் குடவாசல் தினகரன், மாவட்டச் செயலாளா் மணக்கால் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அகர ஓகை நா்த்தன விநாயகா் கோயிலில்...

அகர ஓகை பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு நா்த்தன விநாயகா் கோயில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மகா பூா்ணாஹூதியும் நடைபெற்றன. பின்னா் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து, கோபுரத்தை அடைந்தன.

அங்கு கோபுர கலசத்துக்கு புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image