திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கட ந்த 28.4.2018இல் குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு வருஷாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மகா மண்டபத்தில் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
பின்னா், கலசங்களில் புனிதநீா் திருக்கோயில் பிரகாரங்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து கலசங்களுக்கு பட்டுவஸ்திரம் மாலை அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி-அம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி பஞ்சமூா்த்தி வீதியுலா நடைபெற்றது.
இவ்விழாவில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா.வெங்கடாசலம், கோயில் செயல் அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

குடியாத்தம் கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் வருஷாபிஷேகம்

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


