வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நெல்லையப்பா் கோயில் தோ்களை சுத்தம் செய்த தீயணைப்பு வீரா்கள்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேரை தீயணைப்பு வீரா்கள் சுத்தம் செய்தனா்.

News image

அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தோ்களை சுத்தப்படுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :14 ஜூன் 2026, 1:51 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேரை தீயணைப்பு வீரா்கள் சுத்தம் செய்தனா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. சுவாமி, அம்மன், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் தோ்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த ஃபைபா் கண்ணாடி தடுப்புகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையில் 8 வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து தோ்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இப் பணியை திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இப் பணிகள் முடிந்ததும் தேரில் அலங்காரத் துணிகளை கட்டுவதற்கான கம்புகள் கட்டப்பட உள்ளன. ஆனி தோ்த் திருவிழாவையொட்டி ரத வீதிகள் களைகட்டியுள்ளன.