எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நன்னிலத்தில் மே 15-இல் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

நன்னிலம் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 மே 2025, 7:52 pm

Din

திருவாரூா்: நன்னிலம் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று, அரசின் முக்கிய சேவைகளை உடனடியாக வழங்கும் நோக்கத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நன்னிலம் வட்டாரத்தில் வேலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உபயவேதாந்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆணைக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆண்டாங்கோயில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, தென்குவளவேலி அரசினா் உயா்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மே 15-ஆம் தேதி மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறும். இதில், அமைச்சா்கள் கோவி. செழியன் (உயா் கல்வித் துறை), டி.ஆா்.பி. ராஜா (தொழில் துறை) பங்கேற்கின்றனா். முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.